Blog - Lemuriya Foundation - Page 2

துளி – 42 இறையனார் அகப்பொருள்

இறையனார் களவியல் அல்லது இறையனார் அகப்பொருள் என்னும் நூல் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஓர் அருமையான இலக்கண நூல். இது தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. சற்றொப்ப 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்.

துளி – 41 ஆசாரக் கோவை

ஆசாரக் கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம். தமிழில் ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

துளி 40 – முதுமொழிக் காஞ்சி

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும், ஒரு வகை அணிகலக் கோவை ஆகும். பல மணிகள் கோர்த்த காஞ்சியின் மணி போல கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முதுமொழிக் காஞ்சியென்பது அறிவுரைக் கோவையாக அமைகிறது.

துளி 39 – பழமொழி நானூறு

நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்கும் கீழ்க்கணக்கு நூல் பழமொழி நானூறு. நாலடிப் பாடல்களின் சொற்பொருள்களைப் பல இடங்களில் தழுவிச் செல்வதனால், இது நாலடியாரோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம்.

துளி 38 – திணைமாலை நூற்றைம்பது

திணை என்பது நிலம், ஒழுக்கம் என பல பொருள் படும் ஒரு சொல்லாகும். இங்கே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலம் குறித்தும், அந் நிலத்திற்குரிய புணர்தல், பிரிதல், முதலிய ஒழுக்கங்கள் குறித்தும் சிறப்பித்துப் பாடப் பெறுகின்றன.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives